இரவு நேரத்தில் திறன்பேசிப் பயன்பாடு தூக்கத்தைப் பாதிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதிகாலை மூன்று மணி வரை திரையை உருட்டிப் பார்ப்பது, இருட்டான அறையில் காணொளிகளைக் காண்பது, படுக்கையில் செயலிமூலம் விளையாடுவது என பலரும் இந்தப் பழக்கத்தில் சிக்கியுள்ளோம். முழுவதுமாக தொலைபேசியைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, அதை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்வு.

அறிவிப்புகளை இரவில் முடக்குங்கள்
படுக்கைக்குச் செல்லும் முன் திறன்பேசியில் படிப்பது பலருக்கும் தூக்கத்தை உண்டாக்கும் பழக்கம். ஆனால் இடையில் வரும் அறிவிப்புகள் இந்த அமைதியான மனநிலையை சீர்குலைத்துவிடும். பிக்சல் (Pixel) தொலைபேசியின் இரவு நேர அமைப்புகள் (Bedtime mode) வசதி குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே அறிவிப்புகளை முடக்கிவிடும். கடிகார செயலியில் அலாரம் போன்ற அவசியமான அறிவிப்புகள் மட்டும் இயங்கும்.
ஆனால் இயல்பு நிலையில், அலாரம் அணைக்கும்போதே இரவு நேர அமைப்புகள் (Bedtime mode) முடிவடைந்து அனைத்து அறிவிப்புகளும் திரையில் குவிந்துவிடும். இதைத் தவிர்க்க, நாமே அதை நிறுத்தும் வகையில் அமைத்துக்கொள்வது சிறந்தது. காலை எழுந்ததும் உடனே அறிவிப்புகளைப் பார்க்கும் பழக்கம் இதன் மூலம் குறையும். அறிவிப்புகளை முடக்குவது தூக்கத்தின் தரத்தில் மிகப்பெரிய நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும்.
தூக்கத்திற்கு ஏற்ற செயலிகளைத் தேர்வு செய்யுங்கள்
மின்படிப்பான் செயலிகள் (e-reader apps), கூகுள் பிளே புக்ஸ் (Google Play Books) போன்றவை நீலஒளி வடிப்பான்கள் (blue-light filters), கரும் பின்னணி (dark mode) போன்ற இரவு நேரத்திற்கு ஏற்ற அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. படிப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், ஒலிப்புத்தகச் செயலிகளில் தானாக நிற்கும் வகையில் அமைத்துக் கேட்பது, குறிப்பேடு செயலியில் படைப்பாற்றல் சிந்தனைகளை எழுதுவது, பிக்சல் ஆர்ட் செயலிகளில் வரைவது என பல்வேறு விருப்பங்கள் உள்ளன.
ஓய்வெடுப்பதற்கான விளையாட்டுகள் சிறந்தவை போல் தோன்றினாலும், அவை அதிக நீலஒளியை வெளியிடுவதால் தூக்கத்தை பாதிக்கும். நிறம் சார்ந்த விளையாட்டுகளை இரவு நேரங்களில் தவிர்ப்பதே நல்லது. முகப்புத் திரையில் தூக்கத்திற்கு ஏற்ற செயலிகளை மட்டும் வைத்து, சமூக ஊடக செயலிகளை செயலி பட்டியலுக்கு (app drawer) மாற்றியதும், தானாகவே அவற்றைத் தொடும் பழக்கம் குறைந்தது. இதன் மூலம் இரவு நேரப் பயன்பாடு கணிசமாகக் குறையும் .
படிப்படியான அணுகுமுறை சிறந்தது
தொலைபேசியை படுக்கை அறையிலிருந்து வெளியே வைக்கும் முயற்சி செய்வோர், தவறவிடும் விஷயங்களைப் பற்றிய கவலையால் தூங்க முடியவில்லை என்கின்றனர். இது பகுத்தறிவற்ற நடத்தை என்று புரிந்தாலும், மாற்றுவது கடினமாக இருக்கும். அதனால் சிறிய படிகளை எடுத்து படிப்படியாக மாற்றிக்கொள்வதே சிறந்த வழி.
இரவு நேரங்களில் படிப்பு, எளிய விளையாட்டுகள் மட்டும் பயன்படுத்தினால் தொலைபேசியை படுக்கையறைக்குக் கொண்டு வர மறந்தாலும் கவலைப்படாத நிலை ஏற்படும். இந்த எளிய மாற்றங்களே படிப்படியாக ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்க உதவும்.
